நாட்டின் 74வது குடியரசு தின விழா – சென்னையில் இன்று இறுதி ஒத்திகை!!
நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கான கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது.
இறுதி ஒத்திகை:
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் குடியரசு தினவிழா ஜனவரி 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டின் 74வது குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – புதுவையில் நேற்று (ஜன 23) முதல் துவக்கம்!
Follow our Instagram for more Latest Updates
அதற்கான 3-வது மற்றும் இறுதி ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று காலை முதல் நடைபெற்றது. அதில் முப்படை, காவல்துறை, உள்ளிட்ட துறைகளின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று காலை 8 மணிக்கு கொடியேற்றம் நிகழும். 9.30 மணியளவில் அணிவகுப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் பிரதமர் மோடி அமர் ஜவானில் மரியாதை செலுத்துவார். அதன் பின் செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றுவார்.