குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – புதுவையில் நேற்று (ஜன 23) முதல் துவக்கம்!
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்த நிலையில் நேற்று (ஜனவரி 23) முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை திட்டம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் தற்போது வரை வெளியிடவில்லை. தமிழகத்தில் இந்த திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு செக் வைத்த கூகுள் நிறுவனம் – இதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தல்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் புதுச்சேரியில் அரசின் எந்தவித உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த 21 முதல் 55 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.மேலும் இந்த திட்டம் நேற்று (ஜன 23) மாலை 6 மணிக்கு கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டம் மூலமாக சுமார் 70 ஆயிரம் பெண்கள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று துவக்கவிழாவில் முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்காக அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது