சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் தங்க விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!
தினசரி ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, சமீப நாட்களாக தொடர்ந்து விலை உயர்வை அடைந்து வருகிறது. இன்றைய காலை நேர சந்தை நிலவரத்தை படி மேலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை:
கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மற்ற முதலீடுகள் அனைத்திலும் எதிர்பாராத சரிவாக இருந்தது. ஆனால், தங்கத்தின் மீதான முதலீட்டில் எந் வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது திரும்பியது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இது வியாபாரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய சந்தை நிலவரத்தின் படி, காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்திற்கான 22 கேரட் நகை மதிப்பு ரூ. 401 உயர்ந்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே கிராம் கணக்கில் ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,730க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வெளியானது ஒரு கிராம் ரூ.59.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது வார இறுதி நாட்களாக இருப்பதால், நகை விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று மேலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கோவில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதன்படி, இன்றைய காலை நேரத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராம் வெள்ளிக்கு ரூ.0.80 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்