தமிழகத்தில் கோவில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அது குறித்து முக்கிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழக கலாச்சாரத்தில் இயல், இசை, நாடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்து வரும் தொழிநுட்பத்தின் காரணமாக இந்த கலைகள் அழிந்து வருகிறது. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் நடத்தப்படும் கோவில் திருவிழாக்களில் இன்னும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரவு நேரங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அதற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதால் அதில் பங்கேற்கும் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற இருப்பதால் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இனி வரும் மாதங்களில் திருவிழாக்கள் நடைபெற இருப்பதால் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
FD திட்டங்களுக்கான புதிய விதிமுறை அமல் – RBI வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த மனு நீதிபதி சக்திகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அதன் பின் சில நிபந்தனைகளுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 7-10 மணி வரை மட்டும் நடத்த வேண்டும், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது, எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது, எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ பிளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது. மேலும் ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது, இரட்டை அர்த்தப் பாடல்கள் இடம்பெறக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்