தமிழகத்தில் அமலில் உள்ள 2 கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மற்ற அனைத்தும் வாபஸ்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இரண்டு கட்டுபாடுகளை தவிர பிற கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய கட்டுப்பாடுகள் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்து 2021 டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு சார்பில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திரையரங்குகள், உணவகங்கள் பேருந்துகள் போன்றவற்றில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச XI அணியின் முழு விவரம் இதோ!
அரசு விதித்த மேற்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. ஆனாலும் நோய்பரவல் நிலையை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. மார்ச் 2ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடைகளை மீறி நடந்த எழில் & அம்ரிதா திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய திருப்பம்!
மேலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சமாக 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது மக்கள் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற இரண்டு கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் அரசு வலியுறுத்தி வருகிறது.