தனது அப்பாவை அம்மாவிடம் பொய் சொல்ல சொல்லும் தமிழ் – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதி தனது அப்பாவின் வண்டியினை சரி செய்து கொடுத்து உதவுகிறார். சரஸ்வதியின் தம்பி இனி படிப்பதற்கு தான் உதவுதாக வாக்கு கொடுக்கிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் சரஸ்வதியின் அப்பா மற்றும் அவரது தம்பி இருவரும் வெளியே கிளம்புகின்றனர். அப்போது லிங்கத்தின் ஆன் ஆகாமல் மக்கர் செய்கிறது. பின்னர், வெளியே கார் புக் செய்து போய் விடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், டாக்ஸி கிடைக்காமல் போகவே, இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கின்றனர். அப்போது சரஸ்வதி வந்து வண்டியினை சரி செய்து கொடுக்கிறார். இதனை பார்த்து லிங்கம் தனது மகளை நினைத்து பெருமை அடைகிறார்.
தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் – ரூ.1,358 கோடி இழப்பு!
பின்னர், சரஸ்வதியை வரும் தேர்வில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்குமாறும் வலியுறுத்துகிறார். அப்படி சரஸ்வதி இந்த முறை நடக்கும் தேர்வில் வெற்றி அடைந்து விட்டால், அவரை இனி நன்றாக பார்த்து கொள்வதாகவும், உலகின் சிறந்த அப்பா போல இனி நடந்து கொள்வதாகவும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு சரஸ்வதி தான் இந்த முறை நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறுவேன் என்று தனது தந்தையிடம் உறுதி கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
இங்கு தமிழ் வீட்டில், அவரது அம்மாவிடம் கார்த்தியின் திருமணம் குறித்து எவ்வாறு பேசலாம் என்று யோசிக்கின்றனர். அப்போது தமிழ் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றால் தான், தனக்கு திருமணம் நடைபெறும் என்று குடும்ப ஜோசியர் கூறி விட்டதாக கூறுமாறு தனது தந்தையிடம் கூறுகிறார். இது நல்ல ஐடியாவாக இருக்கின்றது என்று அவரது அப்பாவும் அவ்வாறே கூறி விடுவதாக கூறுகிறார். பின்னர், மீண்டும் தமிழே தனது அம்மாவிடம் பொய் சொல்ல கூடாது என்று கூறுகிறார். அவரது தந்தை அதனை தான் பார்த்து கொள்வதாக கூறி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.