சந்திரலேகாவின் திட்டத்தை தெரிந்து கொண்ட சரஸ்வதி, தமிழ் புகைப்படத்தை பார்த்த சரஸ்வதி அப்பா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” சீரியல்!

0
சந்திரலேகாவின் திட்டத்தை தெரிந்து கொண்ட சரஸ்வதி, தமிழ் புகைப்படத்தை பார்த்த சரஸ்வதி அப்பா - இன்றைய
சந்திரலேகாவின் திட்டத்தை தெரிந்து கொண்ட சரஸ்வதி, தமிழ் புகைப்படத்தை பார்த்த சரஸ்வதி அப்பா - இன்றைய "தமிழும் சரஸ்வதியும்" சீரியல்!
சந்திரலேகாவின் திட்டத்தை தெரிந்து கொண்ட சரஸ்வதி, தமிழ் புகைப்படத்தை பார்த்த சரஸ்வதி அப்பா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” சீரியல்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கோதை எப்படி மயக்கம் போடாமல் திருமணத்திற்கு வந்தார் என சந்திரலேகா கேட்க, சரஸ்வதி நான் சொல்கிறேன் என நடந்த உண்மையை சொல்கிறார்.

தமிழும் சரஸ்வதியும்:

இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கோதை தொட்டு தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடந்துவிட்டது எப்படி என சந்திரலேகா கேட்கிறார். உன்னை தான நம்பி இருந்தேன் என சொல்ல, அந்த நேரம் பார்த்து சரஸ்வதி வருகிறார். நான் சொல்கிறேன் என சொல்ல, நீங்க கோதை அத்தை காபியில் மயக்க மருந்து கொடுத்தது வரை சரி தான் ஆனால் அதற்கு அப்பறம் என்ன நடந்தது என்றால் என சரஸ்வதி சொல்ல தொடங்குகிறார். அவர் சந்திரலேகா பேசிக் கொண்டிருப்பதை கேட்டதாக சொல்கிறார்.

அமிர்தாவிற்கு பரிசு வாங்க ஐடியா கொடுக்கும் பாக்கியா, கோபியிடம் சண்டையிடம் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

நீங்க போட்ட திட்டம் எல்லாம் தெரியும் ஆனால் அதை நான் தமிழிடமோ அல்லது மாமாவிடமோ சொல்லிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்தால் பெரிய பிரச்சனை ஆகும். அதனால் நீங்க என்ன செய்கிறீங்க என நான் பின் தொடர்ந்தேன். அப்போது நீங்க காபியில் மயக்க மருந்து கலந்ததை நான் பார்த்தேன் சமையல் செய்தவரிடம் நான் காபியை மாற்றி கொடுத்தேன் என சொல்கிறேன். இதை எல்லாம் சொல்லி பிரச்சனை செய்யலாம் என சொல்கிறார்.

ஆனால் அப்படி நான் செய்வது தேவை இல்லை என சொல்கிறார். பின் இந்த அளவிற்கு நீங்க செய்ய கோதை அத்தை என்ன தப்பு செய்தார் என கேட்கிறார். கல்யாணத்தை பார்க்க விட கூடாது என்பதற்காக மயக்க மருந்து கொடுத்தீங்களே உங்களை அவங்க மன்னிபங்களா, சொந்த பையன் கல்யாணத்தை பார்க்க விடாமல் செய்ததற்கு அவங்க உங்களை மன்னிக்கவே மாட்டாங்களா என கேட்கிறார். இனிமேல் அத்தையை அப்படி செய்யாதீங்க ஏன் என்றால் உங்க பொண்ணு அங்கே வாழ போகிறாள்.

சென்னைக்கு கிளம்ப திட்டமிடும் மீனா, கண்ணன் வேலைக்கு போகாமல் இருப்பதை கண்டுபிடிக்கும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இனிமேல் இதை எல்லாம் வெளியே சொல்லி மீண்டும் பிரச்சனையை பெரிதாக மாற்றாதீர்கள் என சொல்கிறார் சரஸ்வதி. சரஸ்வதி வீட்டில் அவரது அப்பா கோதை திருமண நிகழ்ச்சி போட்டோவை பார்க்கிறார். அதில் தமிழ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் அனைவரும் பார்த்து அவங்க வீட்டு கல்யாணமா அது என நினைக்கிறார். மண்டபத்திற்கு சென்றால் யாருடைய கல்யாணம் என பார்க்க மாட்டியா என அருளிடம் சொல்கிறார். சந்திரலேகா கோதை மீது மீண்டும் கோவமாக தான் இருக்கிறார். சரஸ்வதி காரில் சென்று கொண்டிருக்கும் போது மிகவும் சந்தோசமாக இருப்பதாக தமிழிடம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!