சென்னைக்கு கிளம்ப திட்டமிடும் மீனா, கண்ணன் வேலைக்கு போகாமல் இருப்பதை கண்டுபிடிக்கும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
சென்னைக்கு கிளம்ப திட்டமிடும் மீனா, கண்ணன் வேலைக்கு போகாமல் இருப்பதை கண்டுபிடிக்கும் தனம் - இன்றைய
சென்னைக்கு கிளம்ப திட்டமிடும் மீனா, கண்ணன் வேலைக்கு போகாமல் இருப்பதை கண்டுபிடிக்கும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
சென்னைக்கு கிளம்ப திட்டமிடும் மீனா, கண்ணன் வேலைக்கு போகாமல் இருப்பதை கண்டுபிடிக்கும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வேலைக்கு செல்லாமல் இருப்பதால் எதோ தவறாக இருக்கிறது என தனம் நினைக்கிறார். பின் ஜனார்த்தனன் மீனா ஜீவாவை சென்னைக்கு போக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், இனிமேல் பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் கண்ணன் புலம்புகிறார். நான் காலேஜ் படிக்கமாட்டேன் என எவ்வளவோ சொன்னேன் ஆனால் கேட்காமல் பீஸ் கட்டி இப்படி தினமும் காலேஜ் போக வேண்டி இருக்கிறது என சொல்கிறார். எல்லாம் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என ஐஸ்வர்யா சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி பையன் இன்னும் தூங்கி கொண்டிருக்கான என கேட்கிறார். ஆமாம் என தனம் சொல்ல பார்த்துவிட்டு போகலாம் என நினைத்தேன் என மூர்த்தி சொல்கிறார்.

பின் தனம் ஏன் கண்ணன் கடைக்கு போகவில்லை என மீனாவிடம் கேட்க, மீனா நானும் ஐஸ்வர்யாவிடம் கேட்டேன் அதற்கு அந்த புள்ள எதோ சொல்லவந்தது ஆனால் கண்ணன் செல்லவிடாமல் தடுத்தான் என சொல்கிறார். உடனே முல்லை பாத்தீங்களா கண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என போட்டுக் கொடுக்கிறார். ஏன் கடைக்கு போகாமல் இருக்காங்க உன் அப்பாவிடம் கேட்டியா என கேட்க, பிரச்சனையாக இருந்தால் என்னிடம் சொல்லிருப்பாங்க என சொல்கிறார்.

சாந்தியை பார்க்க வரும் மாயன், லட்சுமியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது கஸ்தூரி வந்து தனத்தின் குழந்தையை பார்க்க வருகிறார். குழந்தை என்ன செய்கிறான் என கேட்க, தூங்குறான் என சொல்கிறார். பின் தனத்தின் அம்மா கோவமாக இருப்பதாக தனத்திடம் கஸ்தூரி சொல்கிறார். கஸ்தூரி நாங்க டூர் போகிறோம் என சொல்கிறார். மல்லி உடன் சேர்ந்து கொடைக்கானல் எல்லாம் போயிட்டு 4 நாள் கழித்து தான் வருவோம் என சொல்கிறார். மீனா எத்தனை நாள் என கேட்க 4 நாள் போறோம் நீயும் வரியா என கஸ்தூரி கேட்கிறார்.

மீனா வர தயாராக இருக்க தனம் அதெல்லாம் வேண்டாம் நாங்க போவோம் என சொல்கிறார். முல்லை அத்தாச்சி முன்னாடி அப்படி எல்லாம் பேசாதீங்க என சொல்கிறார். உனக்கு எங்கே போக வேண்டும் என சொல்லு மாமாவிடம் சொல்லி நான் ஏற்பாடு செய்கிறேன் என தனம் சொல்கிறார். மீனா உனக்கு டூர் போக வேண்டும் அதான போறோமா இல்லையா என்று பாரு என சொல்கிறார். முல்லை கதிருக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க, கதிர் வேலை செய்து கொண்டிருக்கிறார். எதற்கு வேலை செய்கிறீர்கள் மாமா வேண்டாம் என்று சொன்னார்கள் அல்லவா என கேட்கிறார்.

‘தென்றல் வந்து என்னை தொடும்’ & ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல்கள் மஹாசங்கமம் – நவம்பர் 15 முதல் ஒளிபரப்பு!

அப்போது கட்டிட வேலை செய்பவர் வந்து பணம் கேட்கிறார். பணம் செலவாகிவிட்டது ஒரு வாரம் காத்திருக்க முடியுமா என கதிர் கேட்கிறார். முல்லை இப்போ மாமாவிடம் என்ன சொல்ல போறீங்க என கேட்க, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். உங்களை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது என முல்லை சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்க, அப்போது மீனாவின் அப்பா வருகிறார். எப்போ பார்த்தாலும் வீட்டில் தான் இருக்கீங்க என மூர்த்தியை கேட்க, ஆமாம் என சொல்கிறார்.

பின் கயல் பிறந்தநாள் பற்றி பேச வந்திருப்பதாக அவர் சொல்கிறார். கயலுக்கு ஜாதகம் எழுத வேண்டும் என சொல்கிறார். பின் அம்மாவும் அப்பாவும் சென்று வந்தால் குழந்தைக்கு நல்லது என சொன்னதாக சொல்கிறார். அந்த கோவில் சென்னை பக்கத்தில் இருப்பதாக சொல்கிறார். ஜீவா மீனாவை தனியாக போக சொல்ல, மீனாவின் அப்பா தனியாக போக முடியாது எனக்கும் அம்மாவுக்கும் வர முடியாது என சொல்கிறார். ஜீவாவிடம் சொல்கிறேன் என மூர்த்தி சொல்கிறார். அதை கேட்டதும் ஜனார்த்தனன் சந்தோசமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!