இன்றைய தமிழும் சரஸ்வதியும் சீரியல் ப்ரோமோவில், தமிழ் தனது காதலை சரஸ்வதியிடம் கூறுகிறார். ஆனால் அவரோ தனக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
தமிழும் சரஸ்வதியும் சீரியல்:
விஜய் டிவி புது சீரியலாக களமிறங்கிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஆரம்ப முதலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடிக்கும் தீபக் மற்றும் நக்ஷத்திரா நாகேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே நிறைய சீரியல்களில் நடத்து மக்களுக்கு பரீட்சையம் ஆனவர்கள். தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் இதில் நடிப்பதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
சந்தியாவின் கனவுக்காக அவரை பிரியும் சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ
பிளஸ் 2 கூட தேறாத ஒரு பெண், தான் படிக்கவில்லை என்றாலும் வரும் பெண் படித்து இருக்க வேண்டும் என பெண் தேடும் தமிழன் அம்மா என எதர்த்தமான கதை களத்துடன் நகர்கிறது இந்த சீரியல். ஏற்கனவே தனது அத்தை பெண் தமிழ் படிக்க வில்லை என்ற காரணத்தால் அவரை திருமணம் செய்ய மறுக்கிறாள். இதை அறிந்து அவமானம் படும் கோதை தமிழுக்கு படித்த பெண் பார்ப்பதாக கூறி சபதம் எடுக்கிறாள். இந்நிலையில் வாத்தியாரின் பெண்ணாக இருக்கும் சரவஸ்தி ப்ளஸ் 2 தேர்வை 8 முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இருக்கிறாள்.
இப்படி, கதை சென்று கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரமிக்கின்றனர். இதை இருவரும் சொல்லி கொள்ள வில்லை. தமிழன் வீட்டில் அவருக்கு படித்த பெண்ணை பார்த்து திருமண தேதி குறிக்கின்றனர். இது அறியாமல் அவரிடம் தனது காதலை சொல்ல வருகிறாள் சரஸ்வதி. அப்போது அவர் நண்பர் தமிழுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லுகிறார். இதை யாருக்கும் தெரியாமல் கேட்டுக்கும் சரஸ்வதி மனது உடைந்து, தனது காதலை சொல்லாமல் செல்கிறாள்.
லட்சுமி அம்மா இறந்து விட்டதாக கூறும் மருத்துவர் – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
தற்போது வெளியான புரோமோவில், தமிழும் சரவஸ்தியும் கோவிலில் சந்திக்கின்றனர். அப்போது அவர் தனது கல்யாணம் நின்று விட்டதாக கூறுகிறார்.அதற்கு காரணம் என்ன என கேட்க, அதற்கு,தனக்கு அந்த பெண்ணை பிடிக்க வில்லை என்றும், தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகவும் சொல்கிறார். பின் அவர் சரஸ்வதியிடம் “நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை என்றும், என்னை திருமணம் செய்து கொள்ளவீர்களா?” என்றும் கேட்கிறார் . அதற்கு அவள் தமிழன் சட்டையை பிடித்து, இந்த கனவையும், ஆசையையும் முன்னாடி சொல்ல கூடாத என்று கூறி அழுகிறாள். பின் தனக்கு நிச்சயம் நடந்து விட்டதாக சொல்லி அழுகிறாள். இதை கேட்டு தமிழ் அதிர்ச்சி அடைகிறார். மேலும் அவரிடம் இனி நமக்குள் ஏதும் இல்லை என்றும் சரஸ்வதி கூறி விடுகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.