சந்தியாவின் கனவுக்காக அவரை பிரியும் சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி 2’ ப்ரோமோவில் சரவணன் சந்தியாவை விவாகரத்து செய்து, அவரை பஸ்சில் வழி அனுப்பி வைக்கிறார்.
ராஜா ராணி 2 சீரியல்:
படிக்கதாக சரவணனை தனது அண்ணன் வற்புறுத்தலால் திருமணம் செய்கிறார் சந்தியா. தனது IPS கனவை தொலைத்து பிடிக்காமல் வாழ்கிறார். சரவணன் படிக்காதவர் என அறிந்தும் மீண்டும் அவரை வெறுக்கிறார் சந்தியா. சரவணனின் அம்மாவான சிவகாமி படித்த பெண் என்பதால் சந்தியாவை வெறுக்கிறார். பின் கால போக்கில் சந்தியா சரவணன் மீது காதல் கொள்கிறாள். இதை உணராதா சரவணன் சந்தியா தன்னிடம் விவாகரத்து கேட்கிறார், என தவறாக புரிந்து அவரை விட்டு விலக நினைக்கிறார். இதனால் அவரை வெறுப்பது போல் நடிக்கிறார் சரவணன்.
லட்சுமி அம்மா இறந்து விட்டதாக கூறும் மருத்துவர் – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
பார்வதி மற்றும் பாஸ்கர் திருமணம் சந்தியாவால் தான் 2 வருடம் கழித்து நடைப்பெற போகிறது என குடுப்பத்தினர் தவறாக புரிந்து கொண்டு அவரை திட்டுகின்றனர். இதை அமைதியாக கவனிக்கும் சரவணன் சந்தியாவை தனியாக அழைத்து ரூமுக்கு செல்கிறார். இருவரும் என்ன செய்கிறார்கள் என செய்வது அறியாமல் குழப்பத்தில் நிற்கினர் குடுப்பத்தினர். சரவணன் சந்தியாவின் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். சரவணன் குடும்பத்தினர் அனைவரும் அவரை தடுக்கிறார்கள். ஆனால் சந்தியாவோ நான் இங்கிருந்து செல்வது தான் சரி என எண்ணி அழுது கொண்டே செல்கிறார்.
ட்ரோன் மூலம் வான் வழியாக மருந்து விநியோகம் செய்யும் திட்டம் – மத்திய அரசின் புதிய முயற்சி!
தற்போது வெளியான ப்ரோமவில் சரவணன் சந்தியாவை பஸ்சில் வழி அனுப்ப வைக்க செல்கிறார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் அழுகின்றனர். சந்தியா மனதுக்குள் சரவணனின் கையை பிடித்து ” இந்த நிமிசம் வரைக்கும் நான் உங்க மேல முழு அன்போடு, பாசத்தோடு தான் இருக்கேன், உங்க மனதுளையும் அந்த அன்பு இருக்குனு தான் நம்புறேன்” என சொல்லி அழுகிறாள். ஆனால் சரவணனோ அவரை கையை உதறி விட்டு அங்கிருந்து செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.