சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறையின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பகதர்கள் வர அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிகமான மழை காரணமாக சதுரகிரி மலை பகுதிகளுக்கு செல்ல பிப். 4 மற்றும் பிப். 5ம் தேதி பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்பு கட்டாயம் – புதுவை அரசு உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
அதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கனமழை அதிகமாக இருப்பதால் பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.