மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்பு கட்டாயம் – புதுவை அரசு உத்தரவு!!
தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுவையிலும் மின் பயனர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் இணைப்பு எண் – ஆதார்:
தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் நோக்கில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் பெயரில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக ரயில்வே ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு!!
தற்போது ஆன்லைன் வாயிலாகவும், மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் மக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். இப்பணியை முடிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் டிச. 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் சில மின் நுகர்வோர்களின் நலன் கருதி கால அவகாசம் ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும் சர்வர் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் ஏராளமானோர் ஆதார் – மின் இணைப்பு எண் பணியை மேற்கொள்ளாததால் தற்போது பிப். 15 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுவையிலும் மின் பயனர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.