அரசு பணியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வுக்கான அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
TET தேர்வு:
மத்திய அரசின் உத்தரவின் படி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி வாரியங்களின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு மாநில வாரியான டெட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆசிரியர் தகுதி தேர்வு 2024 க்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்வது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்கு மாவட்ட கல்வி அலுவலரிடம் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும்.
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
ஆனால் தெலுங்கானா உயர் நீதிமன்ற உத்தர உத்தரவின்படி பள்ளி கல்வி துறை ஆனது இன்று புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பணியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 27 முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை TET தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.