ஆப்கானில் பெண்களின் உரிமைகள் மறுப்பு – ஐ.நாவின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் தலிபான்கள்!

0
ஆப்கானில் பெண்களின் உரிமைகள் மறுப்பு - ஐ.நாவின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் தலிபான்கள்!
ஆப்கானில் பெண்களின் உரிமைகள் மறுப்பு - ஐ.நாவின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் தலிபான்கள்!
ஆப்கானில் பெண்களின் உரிமைகள் மறுப்பு – ஐ.நாவின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் தலிபான்கள்!

ஆப்கானில் நடந்து வரும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானில் வழங்கப்பட்டு வரும் உதவித்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

திட்டங்கள் நிறுத்தம்:

ஆப்கானில் கடந்த வருடம் அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து தீவிரவாத அமைப்பான தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான பல உரிமைகள் தொடர்ந்து அங்கு மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஆப்கானில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கான கல்வியை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறுமிகளும் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்நாட்டில் பெண்கள் உயர் பதவி வகிப்பதையும் கடந்த வாரம் தலிபான் அரசு ரத்து செய்தது. இதற்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். அத்துடன் உறுப்பு நாடுகளும் தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

அதிரடி உத்தரவு.. 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இத்தகைய நிகழ்வின் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் சில உதவித்திட்டங்கள் தற்காலிக நிறுத்தப்படுவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. பெண் பணியாளர்கள் இல்லாமல் திட்டங்களை இயக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஐநா அதிகாரிகள் பெண்கள் பணி புரிவது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. அது தொடர வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் ஆப்கான் அதிகாரிகள் தங்களின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Special Launch on Bank Exam Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!