தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் – தமிழக அரசு!
தமிழக அரசு பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் தற்காலிக அரசு ஊழியர்கள் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் என அரசு தரப்பு வக்கீல் கூறியுள்ளார். அதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
மகப்பேறு விடுப்பு:
தமிழகத்தில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு 180 நாட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் 270 நாட்களாக அதிகரித்து 2016ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்காலிக பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு நீடித்து 2020ம் ஆண்டு உத்தரவிடப்பட்டு நிலையில் அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு – மாலை நிலவரம்!
இதில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்க கோரி விண்ணப்பித்தும் அவை இன்னும் நிலுவையில் உள்ளன. மகப்பேறு விடுப்பு வழங்கப்படவில்லை. எனவே பணிவரன்முறை செய்யப்படாத தற்காலிக ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பணி வரன்முறைப்படுத்தப்பட்ட மற்றும் பணி வரன்முறைப்படுத்தப்படாத பெண் ஊழியர்களை சமமாக பாவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் – முக்கிய உத்தரவு!
இன்று வழக்கு மீண்டும் அமர்வுக்கு வந்த நிலையில் வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் மகப்பேறு விடுப்பை பெற்றுக் கொள்ளலாம். மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரித்து கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.