சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு – மாலை நிலவரம்!
சென்னையில் நேற்று (செப்டம்பர் 15) ஒரு நாள் மட்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 16) மீண்டுமாக காலை, மாலை என இரு வேளைகளிலும் கடும் சரிவை கண்டுள்ளது.
மாலை விற்பனை
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தொற்று தற்போது ஓய்ந்திருக்கும் சூழலில் மக்களின் வழக்கமான பணிகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் தற்போது அத்தியாவசிய சேவைகள் உட்பட துணிக்கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அதன் படி நீண்ட நாட்கள் கழித்து திறக்கப்பட்டுள்ள நகைக் கடைகளில் தற்போது வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் – முக்கிய உத்தரவு!
அந்த வகையில் கடைகள் திறக்கப்பட்டவுடன் தங்க நகைகளின் விற்பனையானது தினசரி ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் தங்க நகைகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வந்தது. இந்த தொடர் சரிவால் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 16) காலை துவங்கிய ஆபரண தங்கத்தின் விற்பனை சவரனுக்கு 176 ரூபாய் சரிவை கண்டிருந்தது.
SBI வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் – 6.70% ஆக நிர்ணயம்!
இதை தொடர்ந்து மாலை விற்பனையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 என குறைந்து, ஒரு சவரம் நகை ரூ.35,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,415க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67 என விற்பனையாகிறது.