ஆகஸ்ட் 16 முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – மேகாலயா அரசு அனுமதி!
மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா தலைமையில் நடைபெற்ற கொரோனா ஊரடங்கு ஆய்வு கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மீண்டும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழிபாட்டு தலங்கள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக பாதிப்புகள் குறைந்து வரும் பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் கே சங்மா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தற்போது மாநிலத்தில் இன்னும் 4,734 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளனர். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 50% பேர் செலுத்திக் கொள்ளவில்லை.
அரசின் உதவித்தொகை பெறுவோருக்கு ரூ.500 அதிகரிப்பு – வங்கிக் கணக்கில் டெபாசிட்!
இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் மீண்டும் திறக்கப்பட்டு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் பிரஸ்டோன் டைன்சோங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், மத இடங்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், பல்வேறு மத அமைப்புகளால் திருமணங்களை நடத்த ஆகஸ்ட் 16 முதல் அனுமதிக்கப்படுவதாகவும், இருப்பினும் அரசு அறிவித்துள்ள அனைத்து நிலையான பாதுகாப்பு வழிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.