அரசின் உதவித்தொகை பெறுவோருக்கு ரூ.500 அதிகரிப்பு – வங்கிக் கணக்கில் டெபாசிட்!
என்.ஆர்.காங்கிரசின் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், உதவித்தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என ரங்கசாமி அவர்கள் கூறியிருந்த நிலையில் பதவி ஏற்றவுடன் தற்போது, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கூடுதலாக ரூ.500 செலுத்தப்பட்டுள்ளது.
உதவித்தொகை அதிகரிப்பு:
அரசு சார்பில் முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு வாழ்க்கைக்கு உதவுவதற்காக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு பெரிதும் பயன்பட்டு வரும் நிலையில் என்.ஆர்.காங்கிரசின் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், உதவித்தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என ரங்கசாமி கூறியிருந்தார். மேலும் செலுத்தப்படுவதாக கூறி இருந்த கூடுதலான ரூ.500 நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்!
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் கூறியதாவது, முதல்வர் ரங்கசாமி பதவி ஏற்ற பொழுது முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வரை மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 847 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அவர்கள் இன்று முதல் அந்த பணத்தை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், புதிதாக இணைக்கப்பட்ட 10,000 பயனாளிகளுக்கு 13ம் தேதி அவர்களது வங்கி கணக்கில் உயர்த்தப்பட்ட உதவித்தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.