தமிழகத்தில் 100 டிகிரியை எட்டிய வெப்பநிலை – அவசர உதவிக்கு 104 – ஐ அழைக்கலாம்.. வழிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் 100 டிகிரியை எட்டிய வெப்பநிலை - அவசர உதவிக்கு 104 - ஐ அழைக்கலாம்.. வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் 100 டிகிரியை எட்டிய வெப்பநிலை - அவசர உதவிக்கு 104 - ஐ அழைக்கலாம்.. வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் 100 டிகிரியை எட்டிய வெப்பநிலை – அவசர உதவிக்கு 104 – ஐ அழைக்கலாம்.. வழிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் நிலவும் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்ணை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

வழிமுறைகள்:

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை 3 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

PG TRB Exams 2023 தேர்வுக்கான சிறந்த Online Classes – குறைந்த கட்டணத்தில்!

அதாவது கோடை காலங்களில் உடலில் நீர்ச்சத்து அவசியம். அதனால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும் உப்பு – சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு மற்றும் பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகள், நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

கொளுத்தும் வெயிலில் காற்றோட்டமான இடங்களில் வசிப்பது நல்லது. அதோடு மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்து சரும பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி மற்றும் ஆலோசனைக்கு 104 என்ற இலவச உதவி என்னை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!