10ம் வகுப்பு தேர்வு மையங்களில் CCTV கேமராக்கள் பொருத்த உத்தரவு – மாநில கல்வித்துறை அதிரடி முடிவு!
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் எந்தவித தவறும் இல்லாமல் நடைபெறுவதற்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
CCTV கேமராக்கள்
தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த பொதுத்தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா போல பரவும் இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் – எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்!
அதன்படி தற்போது, பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் 180 டிகிரி வரை செல்லக்கூடிய 3 மெகாபிக்சல் கொண்ட CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை DEO அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதே போல், தனியார் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் CCTV கேமராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதியாக பொதுத்தேர்வின் கடைசி நாளில் CCTV கேமராக்களை DEO அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.