புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளி திறப்பு – தெலுங்கனா டிஜிபி தொடங்கி வைப்பு!!
தெலுங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டம், ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி நலன் கருதி டிஜிபி ரூபேஷ் புதிய பள்ளி ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
புதிய பள்ளி
தெலுங்கனாவின் பெத்தப்பள்ளி மாவட்டம், ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதனை பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற ஐபிஎஸ் அதிகாரி சி ரூபேஷ் அவர்கள் நேரில் பார்த்தார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் – அரசின் அதிரடி நடவடிக்கை!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இங்கு இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஏராளமானோர் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருப்பதையும் உணர்ந்தார். அதனால் இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி படிப்பை வழங்கிட வேண்டும் என பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டார். இதில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைகளுக்கு கல்வி வழங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
அதன்படி தற்போது Dhruva என்ற நவீன வசதிகளுடன் கூடிய பள்ளியை காவல் ஆணையர் திறந்து வைத்துள்ளார். இப்பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் LED தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.