ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

0
ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!!
ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!!
ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் கிடுகிடுவென அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெலுங்கானா அரசு வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு நேர ஊரடங்கு:

நாடு முழுவதும் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று பதிவாகி உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. டெல்லியில் நேற்று முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம், புதுவையிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தெலுங்கானா மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள், ஹோட்டல்கள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள், பெட்ரோல் பங்குகள் செயல்பட மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!

இரவு நேர ஊரடங்கில் மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!