தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுவதுமாக மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்க இருந்த பொதுத்தேர்வுகள் கொரோனா 2வது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்துள்ள அரசு, அதன் பின்னர் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலால் கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளது.
தமிழகம், புதுவையில் இரவு நேர ஊரடங்கு – இன்று முதல் அமல்!!
தற்போது தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி தேர்வுகளையும் கட்டாயம் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pls Da deiii college ah open panunga Da veetla bore adikithu ….tholla thanga mudiyala
Corona um ila onum ila ellame scam uhhh
#coronaisjustascam