IPL 2022 – ரெய்னாவை கைவிட்ட CSK, ரோஹித் & கோஹ்லி உட்பட முன்னணி வீரர்களை தக்கவைத்த அணிகள்!
வரும் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளுக்காக ஒவ்வொரு அணிகளும் குறிப்பிட்ட சில வீரர்களை தங்களது அணியில் மீண்டுமாக தக்கவைத்து கொண்டிருகிறது. அந்த வீரர்களின் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
IPL வீரர்கள்
ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் திருவிழா, இந்த ஆண்டு கொரோனா 2ம் அலைபரவலால் தாமதமாக நடத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்த IPL 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது. இதை தொடர்ந்து வரும் 2022ம் ஆண்டிற்கான IPL போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் துவங்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் 7,296 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! டிச.15 கடைசி நாள்!
இதற்கிடையில் 2022ம் ஆண்டிற்கான IPL போட்டிகளில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைந்திருப்பதால் போட்டிக்களம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது IPL போட்டிகளில் களம் காண்டு வந்த 8 அணிகளும் சில நட்சத்திர வீரர்களை தங்களது அணியில் மீண்டுமாக தக்கவைத்துள்ளனர். இதற்கான நிகழ்வு நேற்று (டிச.1) நடைபெற்ற நிலையில் எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்கவைத்து கொண்டது என்பதை இப்பதிவில் காணலாம்.
டிச.10 வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
இப்போது அணி வாரியாக தக்கவைக்கப்பட்ட வீரர்களின் மறுபரிசீலனை விவரங்களின் படி,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
- விராட் கோலி – 15 கோடி
- கிளென் மேக்ஸ்வெல் – 11 கோடி
- முகமது சிராஜ் – 7 கோடி
மும்பை இந்தியன்ஸ்:
- ரோஹித் சர்மா – 16 கோடி
- ஜஸ்பிரித் பும்ரா – 12 கோடி
- சூர்யகுமார் யாதவ் – 8 கோடி
- கீரன் பொல்லார்ட் – 6 கோடி
மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பட்டியல்!
பஞ்சாப் கிங்ஸ்:
- மயங்க் அகர்வால் – 14 கோடி
- அர்ஷ்தீப் சிங் – 4 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
- கேன் வில்லியம்சன் – 14 கோடி
- அப்துல் சமத் – 4 கோடி
- உம்ரான் மாலிக் – 4 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்:
- ரவீந்திர ஜடேஜா – 16 கோடி
- எம்எஸ் தோனி – 12 கோடி
- மொயின் அலி – 8 கோடி
- ருதுராஜ் கெய்க்வாட் – 6 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
- ரிஷப் பந்த் – 16 கோடி
- அக்சர் படேல் – 9 கோடி
- பிரித்வி ஷா – 7.5 கோடி
- அன்ரிச் நார்ட்ஜே – 6.5 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்:
- சஞ்சு சாம்சன் – 14 கோடி
- ஜோஸ் பட்லர் – 10 கோடி
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 4 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
- ஆண்ட்ரே ரசல் – 12 கோடி
- வருண் சக்ரவர்த்தி – 8 கோடி
- வெங்கடேஷ் ஐயர் – 8 கோடி
- சுனில் நரைன் – 6 கோடி
தக்கவைத்த பிறகு ஒவ்வொரு அணிக்கும் மீதமுள்ள தொகை:
- RCB – 57 கோடி
- MI – 48 கோடி
- PPKS – 72 கோடி
- SRH – 68 கோடி
- CSK – 48 கோடி
- DC – 47.5 கோடி
- KKR – 48 கோடி
- RR – 62 கோடி
இந்த வீரர்களை தவிர IPL அணியின் பழைய உரிமையாளர்கள் தங்கள் நட்சத்திர வீரர்களை திரும்பப் பெற விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்றோர் தங்களது அணிகளுடன் இணைவார்கள் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் KL ராகுல், புதிய உரிமையாளரான லக்னோ அணியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பெங்களூரு, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் புதிய கேப்டன்களை தேடும் பட்சத்தில் இவர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் சிறந்த தேர்வாக இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.