TCS, Infosys, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுக்கு வரும் WORK FROM HOME!
கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வருவதை முன்னிட்டு விப்ரோ, காக்னிசன்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய அறிவிப்பு:
இந்தியாவின் உயர்மட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் மெதுவாகவும் படிப்படியாகவும் குறைந்து வருவதால், ஐடி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் விப்ரோ, காக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த மாத தொடக்கத்தில் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் திட்டத்தில் உள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறை தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அலுவலகங்களில் இருந்து வேலை செய்வது பெரிய மாற்றமாக இருக்கும்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளையே கடைசி நாள்!
பெரும்பாலான நிறுவனங்கள் கலப்பின முறையில் பணியாற்ற திட்டமிட்டாலும், ஐடி ஊழியர்களின் சில சிரமங்களை தவிர்க்க முடியாது. விப்ரோ அதன் மேலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பதவிகளை வகிக்கும் ஊழியர்களை மார்ச் 3,ம் தேதிக்குள் அலுவலகத்துக்கு வர கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும். காக்னிசென்ட் தனது அலுவலகங்களை ஏப்ரல் மாதத்திற்குள் திறக்க திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இறுதி வரை கலப்பின முறையில் பணியை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உயரவிருக்கும் பத்திரப்பதிவு கட்டணம் – அரசின் வருவாய் அதிகரிக்கும் யுக்தி!
இன்ஃபோசிஸ் அதன் அலுவலகங்களை அடுத்த 3-4 மாதங்களில் அதிக ஊழியர்களுடன் திறக்க திட்டமிட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி அதன் ஊழியர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள அவர்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், ஒட்டுமொத்த கோவிட்-19 நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால், பலர் ஏற்கனவே அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற தொடங்கியுள்ளதாகவும் டிசிஎஸ் கடந்த வாரம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.