தமிழகத்தில் உயரவிருக்கும் பத்திரப்பதிவு கட்டணம் – அரசின் வருவாய் அதிகரிக்கும் யுக்தி!
தமிழகத்தில் தற்போது அரசின் நிதிநிலையை உயர்த்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி விரைவில் பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயரவிருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்திரப்பதிவு கட்டணம்:
தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கால பேரிடர் காரணமாக அதிக அளவிலான பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கும், மருத்துவ உபகாரணங்களுக்கும் அதிக அளவிலான பணத்தை அரசு ஒதுக்கீடு செய்தது தான் இதற்கு காரணம். இதனை சரி செய்ய மற்ற வழிகளில் அரசின் வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு யுக்திகளையும் அரசு பரிசீலினை செய்து வருகிறது. அதில், ஒரு பகுதியாக பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
Post Office இல் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!
கடந்த நிதியாண்டில் பத்திரப்பதிவு மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் கிடைத்தது. இதனால் தற்போதைய நிதியாண்டில் அரசின் வருவாயை பத்திரத்துறையின் மூலம் 15 ஆயிரம் கோடி எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், கடந்த ஜனவரி மாத இறுதி வரை 10, 785 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மீதம் உள்ள ஒரு மாதத்தில் 4,215 கோடி ரூபாய் பணத்தை வசூலிக்கும் தீவிர நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதனை எதன் மூலம் வசூலிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகின்றது. ஜி.எஸ்.டி கே காரணமாக பிற வழிகளில் வரி உயர்வை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தலைதூக்கும் பிஏ 2 வைரஸ் தொற்று அச்சம்!
சொத்து விற்பனை பதிவில் தற்போதைய நிலவரப்படி 7 சதவீதம் முத்திரை தீர்வை, 4 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நாட்டிலேயே இது அதிக பட்ச கட்டணமாக இருப்பதால் இதனை உயர்த்த முடியாது. அதிக மதிப்புள்ள சொத்துக்களின் செட்டில்மென்ட் பத்திரங்களுக்கும், குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் விதிக்கலாம்.சொத்து மதிப்பில் குறைந்தபட்சம், 1 அல்லது 2 சதவீதம் கட்டணம் நிர்ணயித்தாலும், பெரிய அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பதிவுத்துறை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை விரைவில் நடத்தப்பட்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகின்றது.