டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கான முக்கிய ஷாக் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்:
கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு Work From Home முறையை வழங்கியது. அதன் பின்னர், கொரோனா தொற்று படிப்படியாக குறைய குறைய அனைத்து ஊழியர்களையும் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்தது. ஆனால், தற்போது வரையிலும் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் ஊழியர்கள் Work From Homeல் பணியாற்றி வருகின்றனர். டிசிஎஸ் நிறுவனம் பலமுறை ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தும் தற்போது வரையிலும் ஊழியர்கள் Work From Home முறையில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரூ.58,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!
இந்நிலையில், தற்போது TCS நிறுவனம் Work From Home முறையை மார்ச் இறுதி வரையில் மட்டும் நீட்டிப்பு செய்துள்ளது. அதற்குப் பிறகும் அலுவலகத்திற்கு வர மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சைபர் அட்டாக்குகள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாத சூழலில் பணிபுரியும் போது தகவல் திருட்டுக்கு வழி வகுக்கலாம் என டிசிஎஸ் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த காலாண்டில் இருந்து 25-25 ஹைபிரிட் மாடலை கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.