தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – தேர்தல் ஆணையம் உத்தரவு!

0
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடல்:

தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்து இருக்கிறது. அதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்!

அந்த பணியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் படி கடந்த 4ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14,701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23,354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – வெளியான புதிய உத்தரவு! கல்வித்துறை நடவடிக்கை!

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகள் வாக்குசாவடிகளாக மாற்றப்பட இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!