தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் நடக்க இருந்த அரையாண்டு தேர்வு திருப்புதல் தேர்வாக மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடங்க உள்ளது.
திருப்புதல் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வழக்கமாக நடைபெறும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு தேர்வை திருப்புதல் தேர்வாக மாற்றி கடந்த மாதம் ஜனவரியில் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தது.
பிப்ரவரி 10 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஒமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் ஜனவரி மாதத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இத்தேர்வுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில் 10 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியிலும் , 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியிலும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – வெளியான புதிய உத்தரவு! கல்வித்துறை நடவடிக்கை!
ஆனால் கொரோனாவின் 3 வது அலை தாக்கம் அதிகரித்ததால் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திருப்புதல் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 10 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தேர்வு நடைபெறுகிறது. நாளை பிப்ரவரி 10 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ஆங்கில பாடத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு நடைபெற இருப்பதால் ஆங்கில பாடத் திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.