தமிழ்நாடு மின் வாரிய துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை…!
தமிழ்நாடு மின் வாரிய துறையானது (TNEB) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Electrician பணிக்கு 25 பணியிடங்கள் திருவள்ளூர் மாவட்ட Tangedco (TNEB) யில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
- Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
- Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.