தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு – மார்ச் 31 வரை நீட்டிப்பு! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைத்தல் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மார்ச் 31 வரை நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முடக்கப்பட்டது. இதனால் அதிக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் தொற்று குறைவு காரணமாக மீண்டும் அனைத்து நிறுவனங்களும் திறக்கப்பட்டது. பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திருப்பினர். கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.
SBI PO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மீண்டும் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த வகையில் மீண்டும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முந்தைய கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தற்போதய சூழ்நிலையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகி வருகின்றன. தமிழக அரசின் பொருளாதார பற்றாக்குறை காரணமாக ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு என்பது ஒரு வருடத்திற்கு மேல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாகம். அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தொடர்ந்து ஈட்டிய விடுப்பு குறித்து அறிவிப்பு வரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைத்தல் 31.03.2022 வரை நடைமுறையில் இருக்கும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.