தமிழகத்திற்கு இன்று (ஜன.26) உறைபனி எச்சரிக்கை – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்திற்கு இன்று (ஜன.26) உறைபனி எச்சரிக்கை - வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் இன்று (ஜன.26) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் தென்னந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்று (ஜன. 26) வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் கறைகள் பகுதிகளில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனை தவிர தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஜன. 27 ஆம் தேதி காலையில் லேசான பனிமூட்டமும், ஜன. 28 முதல் பிப்.1 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஜன. 26) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!