தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை வெளியீடு!!

0
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை வெளியீடு!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

வெப்பச்சலனம்‌ காரணமாக,

25.05.2021: கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

26.05.2021 முதல்‌ 29.05.2021 வரை : கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

வட தமிழகத்தில்‌ அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30-40 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

25.05.2021 முதல்‌ 27.05.2021 வரை: குமரிக்கடல்‌ , மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர்‌ வேகத்தில்வீசக்கூடும்‌.

25.05.2021, 26.05.2021: தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று 45-55 கிலோமீட்டர்‌ வேகத்தில்வீசக்கூடும்‌.

தமிழக கிராமங்களில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!

வடக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்‌திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று 60-70 கிலோமீட்டர்‌ வேகத்தில்வீசக்கூடும்‌.

25.05.2021: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 100-110 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 120 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. வடக்கு வங்க கடல்‌, ஒடிஷா மற்றும்‌ மேற்கு வங்க கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 70
கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

ssc

26.05.2021: வட மேற்கு வங்க கடல்‌, ஒடிஷா மற்றும்‌ மேற்கு வங்க கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 155 முதல்‌ 165 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 185 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

25.05.2021 முதல்‌ 29.05.2021 வரை தென்‌ மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேலும்‌ இப்பகுதிகளில்‌ கடல்‌ சீற்றத்துடன்‌ காணப்படும்‌. மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

தமிழக அரசுப்பணியாளர்கள் மே 30 வரை பணிக்கு வர விலக்கு – அரசு ஆணை!!

மத்திய கிழக்கு வங்க கடலில்‌ நிலைகொண்டிருந்த தீவிர புயல்‌ (யாஸ்‌) அடுத்த 12 மணி நேரத்தில்‌ வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில்‌ ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல்‌ பாரதீப்‌-சாகர்‌ தீவுக்கு இடையே பாலசுருக்கு அருகே கடக்கக்கூடும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!