தமிழக கிராமங்களில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!
கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து மக்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தடையில்லாமல் விநியோகம் செய்யப்பட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொருட்கள் விநியோகம்:
தமிழகத்தில் கொரோனா பேரலை தாக்கம் காரணமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 10 முதல் 24 வரை நடைமுறையில் இருந்த முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் செயல்பட காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பணியாளர்கள் மே 30 வரை பணிக்கு வர விலக்கு – அரசு ஆணை!!
தவிர மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் வகையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமையில் (மே 22, 23) ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அன்று மட்டும் அனைத்து வகையான கடைகளும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது. தவிர வெளியூர்களுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தடை இல்லாதவாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் காய்கறிகள் கிடைப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். முன்னதாக அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்வது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (மே 25) ஆலோசனை மேற்கொண்டார். அந்த வகையில் அனைத்து நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் காய்கறிகள், பழங்கள், பால் போன்ற பொருட்களை தடையில்லாமல் விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.