தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 4ம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தின் சில இடங்களில் 113 டிகிரி வெப்பநிலை வரை பதிவாகும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
TN TRB அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பட்டியலை அனுப்ப உத்தரவு!
இதையடுத்து வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த புயல் கடந்த 12ம் தேதி ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலுக்கு பிறகு தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், வேலூர் நாமக்கல், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.