TN TRB அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பட்டியலை அனுப்ப உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3 சதவீத தலைமையாசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தகுதியான வட்டாரக் கல்வி அலுவலா்களின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியின் கீழ் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியா் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக உயா்நிலைப் பள்ளிகளில் மட்டுமே தலைமையாசிரியா் பணிக்கு 3 சதவீத காலிப்பணியிடங்கள் உள்ளன. இதன்படி, தலைமையாசிரியா் பதவிக்கு தகுதியான வட்டாரக் கல்வி அலுவலா்கள் பட்டியலை உடனடியாக அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!
அதாவது, தமிழக அரசு உயா்நிலைப் பள்ளிகளில் உள்ள 3 சதவீத தலைமையாசிரியா் பணியிடங்களை வட்டாரக்கல்வி அலுவலா்களைக் கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தகுதியான வட்டாரக்கல்வி அலுவலா்களை தேர்ந்தெடுத்து உடனடியாக பணியிடங்களை நிரப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், வட்டாரக் கல்வி அலுவலா்களை பதவி உயா்வு மற்றும் பணிமாறுதல் மூலமாக அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பதவியில் நியமனம் செய்ய 1.1.2022 நிலவரப்படி கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னா் பணியில் சோ்ந்த தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலா்களின் முழு விவரங்களையும் வரும் மே 20-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.