தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், தற்போது தற்காலிக வாபஸ் பெற்றுள்ளனர்.
போராட்டம் வாபஸ்
தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன.9) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும், அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அரசு சார்பில் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை வைத்து மாநிலம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
NABARD NABCONS நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – ரூ. 1,00,000/- மாத ஊதியம்!