ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளுக்கு கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு நோய் பரவல் அதிகமாக உள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வார இறுதி நாளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினம் மக்கள் யாரும் பொது இடங்களில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகள் போன்றவை செயல்பட அனுமதியில்லை.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் – அடுத்த வாரம் முதல் தொடக்கம்!!
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, “தமிழகத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி வார இறுதி நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையங்கள் எதுவும் செயல்படாது. இருந்த போதிலும் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே டிக்கெட் முன்பதிவு அல்லது ரத்து செய்து கொள்ளலாம். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்