தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் – அடுத்த வாரம் முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் நடைபெறும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த முடியாமல் போனது. இதனால் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 50% அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி – அரசிடம் கோரிக்கை!!
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, “பள்ளிகள் மூடப்பட்ட பின்னர் நேரடி நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு காணொலிகள் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடங்களை அடுத்த வாரம் முதல் இணையவழியாக தொடர திட்டமிடப்பட்டு உள்ளது”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.