தமிழகத்தில் இன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0

தமிழகத்தில் இன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 8) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மக்களுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். பங்குனி மாதம் பிறந்தது முதல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவின் சிறப்பாக பூச்செரிதல் வைபவம் நடைபெற இருக்கிறது.

தொடங்கியாச்சு கோடை விடுமுறை – மீண்டும் பள்ளிகள் திறப்பது எப்போது?

இந்த திருவிழா காப்புகட்டி தொடங்கி இருக்கிறது. நேற்று திருவிழாவின் சிறப்பாக பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் நேத்திக்கடன் செலுத்தினார்கள். இன்று (ஏப்ரல் 8) தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதனை பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகிற 13 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே 13 ஆம் தேதி வேலை நாளாக இருந்தால் 14 ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!