இன்றுடன் முடியும் 10ம் வகுப்பு தேர்வு – ரிசல்ட் எப்போ தெரியுமா?
10ம் வகுப்பு பொது தேர்வானது இன்றுடன் முடிய உள்ளதால் மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்வு முடிவு:
தமிழகத்தில் 2023 – 24 ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை ஆனது டிசம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருகிறது. கனத்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கியது. தற்போது வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வுகள் முடிவடைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இன்று இறுதியாக சமூக அறிவியல் பாடத் தோ்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருத்தும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 88 முகாம்களில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியிடப்படும் என தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.