தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக இந்த தினங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு பின் அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
வீடு மற்றும் வாகன வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ் …RBI அறிவிப்பு…!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கடுமையான சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.