தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ஏப்ரல் 20 முதல் அமல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மதுபான கடைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நேர குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 10,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு நாளை (ஏப்ரல் 20) முதல் இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அத்தியாவசிய தேவை தவிர்த்து மற்ற பணிகளுக்கு மக்கள் வெளியே வர அனுமதி இல்லை.
TN Job “FB Group” Join Now
தனியார், அரசு பேருந்துகளும், ஆட்டோ, டாக்சி போன்றவைகளும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. மேலும் மதுபான கடைகள் நாளை முதல் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மேலும் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்க கூடாது. வாடிக்கையாளர்கள் காட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வாடிக்கையாளர்களிடையே 6 அடி தனிமனித இடைவெளி இருக்க வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக 660 செவிலியர்கள் பணி நியமனம் – மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!!
மாஸ்க் அணியாதவர்களுக்கு மதுபானங்கள் விற்க கூடாது. மேலும் மதுபான கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க அனுமதியில்லை. கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் நிற்க அனுமதியில்லை. வழக்கமாக மூடும் நேரத்தை விட 1 மணி நேரம் முன்னதாக கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.