தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை – கல்வித்துறை நடவடிக்கை!!
தமிழகத்தில் இன்றுடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட கல்வித்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த கல்வியாண்டை போல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மே 5 முதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்து வரும் நிலையில் மறுஅறிவிப்பு வரும் வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல் 23) நிறைவடைகிறது. அதன் பின்னர் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படும் வரை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக தற்போது வகுப்புகள் நடைபெறுகிறது.
இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் நாளை (ஏப்ரல் 24) முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.