தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் தேர்வு நடைபெற உள்ள 15 அல்லது 20 நாட்களுக்குள் முன்பு பள்ளிகளை திறந்து திருப்புதல் வகுப்புகளை நடத்த கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அடுத்தடுத்து நோய் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
இதனையடுத்து 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 23ம் தேதியுடன் செய்முறை தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், அதன் பின்னர் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஜூன் மாத மத்தியில் அல்லது கடைசி வாரத்தில் நடத்துவதற்கு கல்வித்துறை திட்டமிட்டு வரும் நிலையில், அப்போது இருக்கும் கொரோனா நிலவரத்தை கொண்டு முடிவெடுக்கப்பட உள்ளது. அன்றைய தினம் வரை மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்டு அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பேருந்துகள் இயக்கத்தில் புதிய மாற்றங்கள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பொதுத்தேர்வு தேதியானது தேர்வுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும். அதன்படி 15 முதல் 20 நாட்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு திருப்புதல் பாடங்களை நடத்தி முடித்து தேர்வுக்கு தயார்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.