மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
கோடை விடுமுறை:
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கினால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. ஆன்லைன் முறை பாடங்களில் ஆரம்ப நாட்களில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு புதிய தேர்வு முடிவுகள் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்த காரணத்தால் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதியளித்தது. ஹரியானா மாநிலத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்தும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 24ம் தேதி முதலும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு இன்று முதல் (ஏப்ரல் 22) மே 31ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்