தமிழக பள்ளிகளில் அனைத்து பாடங்களையும் நடத்த வேண்டும் – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்களுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களையும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உள்ளிட்ட 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு தயாராக ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளி மாணவர்களில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி என அறிவித்துள்ளார். அதன் காரணமாக தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தாமல் உள்ளதாக பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு சார்பில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் உயரும் – கல்வி நிபுணர்கள் கருத்து!!
இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முடிக்கப்பட்ட பாடங்கள் குறித்து பள்ளி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் மட்டுமில்லாமல் அனைத்து பாடத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்