12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட மாதிரி தேர்வுகள் – மார்ச் 29 ஆம் தேதி முதல் தொடக்கம்!!
திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மாதிரி தேர்வுகள் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
மாதிரி தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்து வந்த காரணத்தினால் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகமாக பரவத் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
அதன் காரணமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் சரியான நேரத்தில் திறக்கப்படாமல் கால தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO உத்தரவு!!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பாடத்திட்டங்களை குறைக்க அரசு உத்தரவிட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகளை எளிமைப்படுத்த திருப்புதல் தேர்வு மற்றும் முதற்கட்ட மாதிரி தேர்வு மார்ச் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் – கல்வித்துறை உத்தரவு!!
தற்போது இரண்டாம் கட்ட மாதிரி தேர்வுகள் மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா காரணமாக மாணவர்களின் கல்வியில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் இரண்டாம் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும்”, இவ்வாறு கூறினார்.