தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மாணவர்கள் அந்த தினங்களுக்கு மட்டும் பள்ளிக்கு நேரடியாக வர வேண்டும் எனவும் மற்ற நாட்களில் விடுமுறை என அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் எனவும், வழக்கம் போல் அவர்களுக்கு வகுப்புகள் செயல்பட்டு வந்தன. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் 10,000க்கு மேல் பதிவாகி வருவதால் தற்போது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
மேலும் ஏப்ரல் 16 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருவதால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் அறிவியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் நடைபெற உள்ளதால், மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக பொதுத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாள் அன்று மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.