தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
பொதுத்தேர்வு அறிவிப்பு
தமிழக பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயரும் வெப்ப நிலை – தொடரும் வறண்ட வானிலை.. ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!
Follow our Instagram for more Latest Updates
அதன் படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge1.tn.gov.in என்பதில் சென்று user id மற்றும் password கொடுத்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது பள்ளி மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டின் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் பட்டியல் கட்டுகளையும் உறுதிமொழி சான்றினையும் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 02.3.2023 தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்கள் அவற்றை பெற்று கொண்டு தங்கள் வசம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.